Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய யோக வித்யா குருகுலம்

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய யோக வித்யா குருகுலம்

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய யோக வித்யா குருகுலம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 12:37 PM GMT

பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சிஷ்யரான ஸ்ரீ ஆனந்தா சரஸ்வதி ஸ்வாமிகளின் தலைமையில் சென்னையிலும் உத்தரகாசியிலும் இயங்கி வருகிறது யோக வித்யா குருகுலம். யோகாவையும், வேதத்தையும் பல நாடுகளில் பயிற்றுவிக்கும் சேவையை செய்து வரும் யோக வித்யா குருகுலம், கொரோனா நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை அளித்துள்ளது.

உத்தரகாசி மாவட்ட நீதிபதி Dr. ஆஷிஷ் சவுகானிடம் ரூ.1 லட்சித்திற்கான காசோலையை வழங்கினார் சுவாமி ஆனந்தா சரஸ்வதி.

கங்கோத்ரி எம்.எல்.ஏ திரு கோபால் ராவத், உத்தரகாசி நகராட்சி சேர்மேன் திரு ரமேஷ் செம்வால் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக தருமபுரம் ஆதினம் ரூ. 11 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. நாடெங்கிலும் உள்ள இந்து மடங்களும், குருகுலங்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News