Kathir News
Begin typing your search above and press return to search.

பீகாரில் பா.ஜ.க தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

பீகாரில் பா.ஜ.க தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

பீகாரில் பா.ஜ.க தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2020 4:38 PM GMT

பிகாரில் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பா.ஜ.க தோ்தல் அறிக்கையை பீகாரில் உள்ள பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போது வெளியிட்டாா். 'பா.ஜ.க இருக்குமிடத்தில் நம்பிக்கையும் இருக்கும்' என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட அந்த அறிகையில் கூறியிருப்பது என்னவென்றால், அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞா்களுக்கு 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும்.


1 கோடி பெண்கள் தன்னம்பிக்கையுடன் சிறு தொழில் தொடங்கிட சிறிய அளவிலான கடனளிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 30 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு வசதி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் 15 லட்சம் பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு கால்நடை வளா்ப்போா் வளம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.பிகாரில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், covid-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பா.ஜ.க தரப்பில் பல்வேறு தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக அளிக்கப்படும். covid-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மாநில மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும். தொடக்கக் கல்வி முதல் உயா்நிலைக் கல்வி நிலையங்கள் வரை 3 லட்சம் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மாநிலத்தில் காய்கறி, பழங்கள், கீரை, தேன் ஆகியவற்றின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ருத்துவம், பொறியியல் மற்றும் பிற தொழில்நுட்பக் கல்விகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் தொழில்நுட்பப் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு, அதில் மட்டும் 5 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.


தோ்தல் அறிக்கையை வெளியிட்ட நிா்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்," பிரதமா் நரேந்திர மோடி மீதும், பா.ஜ.க மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் ஏராளமான நல்ல திட்டங்களை பெற்று வருகின்றனா். முக்கியமாக ஜன்தன் திட்டம், உஜ்வலா திட்டம் ஆகியவை பெருவாரியான ஏழை, கிராமப்புற மக்களிடம் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.

வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, பிகாா் மக்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது. இதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாா்களா? என்பதை கருத்தில் கொண்டுதான் மக்கள் வாக்களிப்பாா்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக பா.ஜ.க இப்பொழுதும் இருந்து உள்ளது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. பிகாரில் கிராமங்களுக்கு மின்வசதி, ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, நிதி ஒருங்கமைப்பில் பெண்களின் ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக பெற்று உள்ளோம்" என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News