விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.!
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.!
By : Kathir Webdesk
அதிமுக எம்.எல்.ஏ., முத்தமிழ் செல்வனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் முத்தமிழ்செல்வன். இவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாக அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். முன்னதாக நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று சுமார் 1,707 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேபோன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.