Kathir News
Begin typing your search above and press return to search.

பெரிய கட்சியிலிருந்து தன்னை நம்பி வந்தவருக்கு நன்றி தெரிவித்த ரஜினி..!

பெரிய கட்சியிலிருந்து தன்னை நம்பி வந்தவருக்கு நன்றி தெரிவித்த ரஜினி..!

பெரிய கட்சியிலிருந்து தன்னை நம்பி வந்தவருக்கு நன்றி தெரிவித்த ரஜினி..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 1:07 PM GMT

தமிழருவி மணியனுக்கும், அர்ஜூன மூர்த்திக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். வருகின்ற 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 3 பக்க அளவில் அறிக்கை வெளியிட்டிருந்தார்: அதில் தற்போது உள்ள கொரோனா சூழலில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடாவும் ஆக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும், தமிழருவி மணியனுக்கும், அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், கடந்த 3 வருடங்களாக எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்கள், அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியின் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களால் என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியண் இரண்டு பேரும் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News