தமிழகத்தில் இன்று தொடங்கும் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு.!
தமிழகத்தில் இன்று தொடங்கும் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு.!
By : Kathir Webdesk
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் படித்து கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார்.
நீட் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 38 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நேற்று முன்தினம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கலந்தாய்வு இன்று காலை 9 மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி 300க்கும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தினமும் 175 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, போக்குவரத்து வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கலந்தாய்வுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேரவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குவார் என்று தெரிகிறது.