தருமபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானை.. மீட்கும் பணியில் வனத்துறை.!
தருமபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானை.. மீட்கும் பணியில் வனத்துறை.!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பஞ்சபள்ளி சின்னாறு அணையை அருகே உள்ள ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணிர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது.
கிணற்றில் விழுந்த யானை வலி தாங்க முடியாமல் பிளிறல் சத்தம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் யானையின் சத்தத்தை கேட்டு ஓடி சென்று பார்த்தபோது, 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிணறு மிகவும் குறுகியதாக இருப்பதால் யானையை மீட்பது வனத்துறையினருக்கு மிகவும் சவாலானதாக உள்ளது.
எனினும் யானையை விரைவில் மீட்கப்படும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். யானைக்கு 12 வயது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. யானை விழுந்த இடத்திற்கு பொதுமக்கள் அதிகளவு சென்று வருகின்றனர். யானையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.