Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை முதல் தமிழகத்தில் கனமழை.. 3 மாவட்டங்களில் அதீத மழை.. வானிலை மையம் தகவல்.!

நாளை முதல் தமிழகத்தில் கனமழை.. 3 மாவட்டங்களில் அதீத மழை.. வானிலை மையம் தகவல்.!

நாளை முதல் தமிழகத்தில் கனமழை.. 3 மாவட்டங்களில் அதீத மழை.. வானிலை மையம் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 7:19 AM GMT

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் நாளை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.


இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 25ம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது.


இதன் காரணமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். மேலும், 24, 25ம் தேதிகளில் நாளை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


24ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களிலும், 25ம் தேதி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 25ம் தேதி வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கனமழை பெய்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக தயார் நிலையில் இருக்கின்றது என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News