‘நிவர்’ புயல்.. எத்தனை மாவட்டங்களில் காற்று அதிகமாக இருக்கும்.!
‘நிவர்’ புயல்.. எத்தனை மாவட்டங்களில் காற்று அதிகமாக இருக்கும்.!

சென்னை, மாமல்லபுரம் மற்றும் பாண்டிச்சேரி இடையே இன்று நிவர் புயல் கரையை கடக்கவுள்ளது. கரையை கடக்கின்ற நிகழ்வானது நாளை அதிகாலை வரை இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி புயல் கரையை கடக்கின்ற சமயத்தில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ., வரை காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் கடலூருக்கு 300 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 310 கிலோ மீட்டர், சென்னைக்கு 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் நேற்று முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. புரசைவாக்கம் 15செமீ, சோழிங்கநல்லூர் 14.5 செமீ, கிண்டி 14.3 செமீ, மயிலாப்பூர் 14 செமீ, மாம்பலம் 13.6 செமீ, ஆலந்தூரில் 11.9 செமீ மழை இதுவரை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும். 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையை கடக்க ஆரம்பிக்கிறது.