Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியூர் சென்றவர்களுக்கு ஊர் திரும்ப சிறப்பு பேருந்து வசதி.!

வெளியூர் சென்றவர்களுக்கு ஊர் திரும்ப சிறப்பு பேருந்து வசதி.!

வெளியூர் சென்றவர்களுக்கு ஊர் திரும்ப சிறப்பு பேருந்து வசதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2020 5:29 PM GMT

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்புவதற்காக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 4 நாட்களுக்கு சுமார் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னர் மாநிலங்கள் இடையே சிறப்பு ரயில் சேவைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பழையபடி ரயில் சேவை இயக்கப்பட்டால் பேருந்துக்காக மக்கள் காத்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில், முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சென்னைக்கு ஆயிரத்து 395 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு ஆயிரத்து 915 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 18ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 4 நாட்களும் 8 ஆயிரத்து 26 சிறப்பு பேருந்துகளுடன் மொத்த 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News