Begin typing your search above and press return to search.
நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வெதர்மேன்.!
நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வெதர்மேன்.!
By : Kathir Webdesk
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் நாளை காலை வரை கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கீ.மீ. தொலைவில் மையம் கொண்டு நகர்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு 300 கி.மீ., தொலைவில் சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிவர் புயலானது புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு முதல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கின்றபோது மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கி,மீ வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story