Kathir News
Begin typing your search above and press return to search.

பழைய வீடுகளில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு உடனே செல்ல வேண்டும்.. அரசு எச்சரிக்கை.!

பழைய வீடுகளில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு உடனே செல்ல வேண்டும்.. அரசு எச்சரிக்கை.!

பழைய வீடுகளில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு உடனே செல்ல வேண்டும்.. அரசு எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2020 5:10 PM GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

மழை குறித்து வானிலை மையம் அவ்வப்போது அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் ஆபத்து மற்றும் விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றைக் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பழைய கட்டிடங்களில் அதாவது பழைய வீடுகளில் தங்குவதோ அல்லது அவற்றுக்கு அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டாம். இடி - மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, குடைகளை உபயோகப்படுத்த வேண்டாம். மரத்தின் அடியில் நிற்க கூடாது. திறந்தவெளியில் இருக்கக் கூடாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News