மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மை அரசியலுக்காக கைவிடப்பட்ட சுகாதார விதிகள், தொற்று அதிகமாக வாய்ப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மை அரசியலுக்காக கைவிடப்பட்ட சுகாதார விதிகள், தொற்று அதிகமாக வாய்ப்பு;

மேற்கு வங்க மருத்துவர்கள் மன்றம் (WBDF) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இந்த சமுதாயத்தை காப்பாற்ற போராடுகிறார்கள், எனவே கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதிலும், மருத்துவர்களுக்கு ஆதரவான, பாதுகாப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதிலும் ஒரு பின்னடைவு இருக்கக் கூடாது என கூறியுள்ளனர்.
மேலும் , "சந்தேக நபர்களைப் பிரிப்பதை உறுதி செய்தல், நேர்மறை நோயாளிகள், துல்லியமான பரிசோதனை, சோதனை மற்றும் ஆய்வு போன்ற சில விஷயங்களில் நடைபெறும் தவறுகளையும் பட்டியலிட்டுள்ளது.
10 அம்சங்கள் குறித்து கடிதம் எழுதியுள்ள அவர்கள் தங்கள் கடைசி கோரிக்கை அம்சத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சரியாக சேகரிப்பதுடன், அவை வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் அந்த தரவுகள் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வசதியாக இருக்க வேண்டும். இது தொடர்பாக உலகத்துக்கு பொய்யான தரவுகளை அளிப்பதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
முன்னதாக மம்தா சொல்லும் புள்ளி விபரங்கள், மருத்துவர்கள் அளிக்கும் தரவுகள், அலுவலக ஆவணங்களில் பதிந்துள்ள விபரங்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேள்விகள் எழுப்பி, மம்தா அரசுக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டதாகவும் நேற்று முன்தினம் செய்திகள் வந்தன.
குறிப்பாக டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் குறித்த பாதிப்பு தரவுகளை மம்தா மூடி மறைப்பதாகவும் அதனால்தான் அவர் முரண்பட்ட தகவல்களை அளிக்கிறார் என்றும் கூறப்பட்டது.