Kathir News
Begin typing your search above and press return to search.

குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Nov 2018 7:23 PM GMT

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-மொராக்கோ இடையே குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தமானது, இம்மாதம் 11 முதல் 18-ம் தேதிவரை, மொராக்கோ-விலிருந்து இந்தியாவுக்கு முக்கிய பிரமுகர்கள் மேற்கொள்ளும் பயணத்தின்போது கையெழுத்தாக உள்ளது.
பலன்கள்:
பொருளாதார குற்றங்கள், தீவிரவாதம் மற்றும் பிற தீவிர குற்றங்களை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு வலுவான சட்ட வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் வழங்க உள்ளது. இந்தியாவிலும், மொராக்கோ-விலும் தேசிய நலனுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எதிர்கொள்ளும் வகையில், இருதரப்பு நல்லுறவை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும் .
Source : PIB
Next Story
கதிர் தொகுப்பு
Trending News