Begin typing your search above and press return to search.
₹30,000 கோடி மோசடி செய்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை
₹30,000 கோடி மோசடி செய்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை
By : Kathir Webdesk
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை கிளப்பிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தற்போது மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ₹30,000 கோடியை அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட சுதிப்தா சென்னை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைக்கு மாறியது. அவர்கள் இந்த வழக்கை தனித்தனியாக விசாரிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், சாரதா குழுமம் தொலைக்காட்சி வாங்குவதற்கு ₹42 கோடி செலவில் நடைபெற்ற ஏற்பாடுகளுக்கு சட்ட உதவிகளையும் நளினி சிதம்பரம் செய்தததாகவும், அதற்காக சாரதா குழுமம் அவருக்கு ₹1.30 கோடி பணத்தை கட்டணமாக வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இணைந்து நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சி.பி.ஐ செய்தி தொடர்பாளர், நளினி சிதம்பரம் மீது இன்று சி.பி.ஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
Inputs from Samayam Tamil
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை கிளப்பிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தற்போது மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ₹30,000 கோடியை அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட சுதிப்தா சென்னை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைக்கு மாறியது. அவர்கள் இந்த வழக்கை தனித்தனியாக விசாரிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், சாரதா குழுமம் தொலைக்காட்சி வாங்குவதற்கு ₹42 கோடி செலவில் நடைபெற்ற ஏற்பாடுகளுக்கு சட்ட உதவிகளையும் நளினி சிதம்பரம் செய்தததாகவும், அதற்காக சாரதா குழுமம் அவருக்கு ₹1.30 கோடி பணத்தை கட்டணமாக வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இணைந்து நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சி.பி.ஐ செய்தி தொடர்பாளர், நளினி சிதம்பரம் மீது இன்று சி.பி.ஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
Inputs from Samayam Tamil
Next Story