Kathir News
Begin typing your search above and press return to search.

மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்.. துரைமுருகன் நண்பர் குடோனில் வருமானவரித்துறை அதிரடி.!

மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்.. துரைமுருகன் நண்பர் குடோனில் வருமானவரித்துறை அதிரடி.!

மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்.. துரைமுருகன் நண்பர் குடோனில் வருமானவரித்துறை  அதிரடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2019 8:17 AM GMT


வேலூர் அருகே சிமென்ட் ஆலையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.


வருமான வரித்துறையினர் வேலூர் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது, அங்கு, கட்டுக்கட்டாக மூட்டைகளில், அட்டைபெட்டிகளில் பணம் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


ஒவ்வொரு மூட்டையிலும், வார்டு எண் எழுதி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் இவையாகும். எனவே தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவே இவ்வாறு மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.


இது தொடர்பாக, வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த சிமென்ட் ஆலை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என தகவல் கிடைத்துள்ளது. இவர் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News