Kathir News
Begin typing your search above and press return to search.

எவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார்! மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்?

எவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார்! மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்?

எவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார்! மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jun 2019 5:43 PM GMT


அன்று(1967– இல்) நல்லது செய்த காமராஜரை தோற்கடித்தனர். இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல், நல திட்டங்களை கொண்டுவந்த பொன் இராதாகிருஷ்ணனை தோற்கடித்துள்ளனர். வெற்றி பெற்றது வசந்தகுமார் அல்ல, கிறிஸ்தவ மதமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் தான், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. இந்த மாவட்டம் புறக்கணிக்கப்பட்ட மாவட்டம் என்று சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். உதாரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள சாலைகள் சீர் கெட்டு, குண்டும் குழியுமாக தான் கடந்த பல ஆண்டுகளாக கிடந்தன. ஆறு சட்டமன்றத் உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் இருந்தும் ஒரு பிடி மண்ணைக்கூட அள்ளி போடவில்லை. இது தான் உண்மை நிலவரம்.


சாலைகளுக்கு இந்த நிலை என்றால் மற்ற அடிப்படை வசதிகள் பற்றி கேட்கவே வேண்டாம். யார் செய்த புண்ணியமோ கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பொன் இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதன்பிறகு தான், இந்த குமரி மாவட்டத்திற்கு விமோசனம் கிடைத்தது. அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்தி இந்த மாவட்டத்திற்கு நல்லது செய்துள்ளார்.





இந்த மாவட்டத்தில் உள்ள 144 மாநில சாலைகனை, ரூ.4,000 கோடி மத்திய அரசின் நிதியை கொண்டு செப்பனிட்டுள்ளார். மதுரையிலிருந்து திருவனந்தபுரம் வரை, இரட்டை ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் மாநில அரசின் நிதி பங்களிப்பு வேண்டும். ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில், அந்த நிதியை மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுங்கீடு செய்து செயல்படுத்தினார். களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் வரை கேரள மாநிலத்தை சார்ந்த பகுதி. கேரளப்பகுதியில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் அரசாங்கம் நிதி ஒதுக்க இயலாது என்று முட்டுக்கட்டைப்போட்டது. பொன் இராதாகிருஷ்ணன் முயற்சியால் அதற்கும் மத்திய அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி உள்ளார்.





இதுபோல நரிக்குளம் பாலம், சுசீந்திரம் பாலம், பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம் போன்றவை அவருடைய காலத்திற்குப் பிறகும் அவருடைய பெயரை சொல்லிக்கொண்டே நிற்கும். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை நாற்கர சாலை, காவல்கிணற்றில் இருந்து நாகர்கோவில்வரை நாற்கர சாலை இவையெல்லாம் எந்த ஒரு எம்பியாலும் எந்தகாலத்திலும் செயல்படுத்த முடியாதவை. இதுபோல ஏராளமான சிறு குறு பாலங்கள், சாலைகளை, கடந்த 5 ஆண்டுகளில் பொன் இராதாகிருஷ்ணன் அமைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்குகள் 90 சதவீதத்திற்கு மேல், பொன்.இராதாகிருஷ்ணனால் அமைக்கப்பட்டவைதான்.


இவ்வளவு நல்லவைகளை செய்த ஒரு நல்ல மனிதன் என்ற முறையில் பொன் இராதாகிருஷ்ணனுக்குத்தான் இந்த தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள் என்று தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்த நல்ல மனிதனுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று தேர்தலுக்கு முன்பாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்தார்கள். இதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். மதவெறிபிடித்த கும்பல்கள் செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் ஜெபம் செய்தார்கள்.


அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஒவ்வொரு சர்ச்சுகளிலும் பொன் இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடக்கூடாது என்று பாதிரியார்கள் விஷத்தைக் கக்கினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பொன் இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டுப்போட்டால் சர்சுகளை இடித்து விடுவார்கள் என்று பாதிரியார்கள் நெருப்பை பற்ற வைத்தனர்.


கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சிறைகளில் சிறைபட்ட 296 மீனவர்களை பொன் இராதாகிருஷ்ணன் மீட்டுவந்துள்ளார். இவரது முயற்சியால் குமரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பிரதமர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மோடியின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏராளமானோருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை எதையுமே மதம் பார்த்து இந்த மனிதன் செய்யவில்லை. இவை அனைத்தையும், இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அவருக்கு ஓட்டு போடக்கூடாது என்று உள்நோக்கத்தோடு பாதிரியார்கள் சொன்னதை கேட்டு முடிவெடுத்தார்கள் என்றால் மதவெறி எந்த அளவிற்கு தூண்டப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ளலாம். மதசார்பற்ற இந்த நாட்டில் இந்த மதவெறி சரியானதா? கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று இது.


நல்லது செய்த பொன் இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடக்கூடாது என்று இன்றைய பாதிரியார்கள், சர்ச்சுகளில் பிரச்சாரம் செய்தது ஒன்றும் புதிதல்ல. பாதிரியார்கள் சொன்னதைக் கேட்டு அவருக்கு ஓட்டுப்போடாமல் போனதும் வியப்புக்குரியது அல்ல. ஏனெனில் 1969-ஆம் ஆண்டு நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில்(கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பழைய பெயர்) போட்டியிட்ட பெருந்தலைவர் காமராஜருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று அப்போது சர்ச்சுகளில் பிரச்சாரம் செய்தனர். பாதிரியார்கள் சர்ச்சில் சொன்னதைக்கேட்டு காமராஜருக்கு எதிராக போட்டியிட்ட டாக்டர் மோசசுக்குத்தான் அன்று கிறிஸ்தவர்கள் ஓட்டுப்போட்டனர். இது வரலாறு. அன்று மக்களுக்காக உழைத்த காமராஜருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்றனர் பாதிரியார்கள். இன்று நல்லது செய்த பொன் இராதாகிருஷ்ணனுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று கட்டளையிட்டு உள்ளனர் பாதிரியார்கள்.


எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எவ்வளவுதான் நல்லது செய்தாலும் கிறிஸ்தவ மதவெறி தோற்கடிக்கும் என்பது மட்டுமல்ல, நல்லது செய்த ஒரு நல்ல மனிதனின் தோல்வியை கொண்டாடவும் செய்யும்.





ஆமாம், கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் கூட்டம், பொன் இராதாகிருஷ்ணனின் தோல்வியைக் கொண்டாடி மகிழ்கிறது. அவரை தோற்கடித்ததற்காக பாராட்டுவிழாவும் நடத்தி வருகிறது.


கிறிஸ்தவர்களை தொடர்ந்து தவறாக வழிநடத்தும் பாதிரியார் கும்பல்களுக்கு இறுதியாக ஒன்று, நல்லவர்களுக்கு தண்டனை கொடுக்க கிறிஸ்தவர்களை தூண்டுவதன் மூலம் நீங்கள் அவர்களை பாவம் சுமக்க வைக்கிறீர்கள். நீங்கள், அவர்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாகிறீர்கள்!


ஆமென்!



Next Story
கதிர் தொகுப்பு
Trending News