Kathir News
Begin typing your search above and press return to search.

5 கோடி சிறுபான்மை இன மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை திட்டம் ! மத்திய அரசு உறுதி !!

5 கோடி சிறுபான்மை இன மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை திட்டம் ! மத்திய அரசு உறுதி !!

5 கோடி சிறுபான்மை இன மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை திட்டம் ! மத்திய அரசு உறுதி !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2019 6:04 AM GMT



சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 5 கோடி மாணவிகளின் நலனை பேண புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மையினரின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.


குறிப்பாக சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி மாணவிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட உள்ளதாக நக்வி தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News