முன்னாள் முதல்வர்கள் அதிரடி கைது! போராட்டம் நடத்துவதற்கு முன்பே தூக்கிய மோடி சர்க்கார்!
முன்னாள் முதல்வர்கள் அதிரடி கைது! போராட்டம் நடத்துவதற்கு முன்பே தூக்கிய மோடி சர்க்கார்!
By : Kathir Webdesk
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யப்பட்டது , இதற்காக அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதம் நடக்கமால் இருக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.பல அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 40,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 35ஏ மற்றும் 370 சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது. ராஜ்யசபாவில் விவாதத்திற்கு பின், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும், 10% இடஒதுக்கீடு மசோதாவும் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து காஷ்மீர், சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட உள்ளது
.
காஷ்மீரில் பதட்டமான சூழல் ஏற்பட்ட போதே, காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் தேசிய கட்சி(பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் போராட்டம் வெடிக்கும் என்று காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முன்னேரே எச்சரிக்கை விடுத்திருந்தனர். தலைவர்கள் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவல் கிடைத்ததையொட்டி , ஸ்ரீநகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட உமர், முப்தி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.