Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் 'ராஜபக்சே' ஆனார், நடிகர் விஜய் சேதுபதி! ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்!!

தமிழகத்தின் 'ராஜபக்சே' ஆனார், நடிகர் விஜய் சேதுபதி! ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்!!

தமிழகத்தின் ராஜபக்சே ஆனார், நடிகர் விஜய் சேதுபதி! ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Aug 2019 6:47 AM GMT



இலங்கையில் சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்தபோது, சிங்களர்களுடன் சேர்ந்து தமிழ் இனத்துக்கே துரோகம் செய்தவர் முத்தையா முரளிதரன்.


தமிழினப் படுகொலைக்கு பிறகு நாதியற்ற நிலையில் ஈழத்தமிழர்கள் இருந்தபோது, அவர்களுக்கு ஆறுதல்கூட சொல்லாதவர் முத்தையா முரளிதரன். அதோடு நில்லாமல் சிங்கள கிராமங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னவர் அவர். அதற்கும் ஒருபடி மேலே சென்று சிங்களவர்கள் மட்டுமே வாழும் 2 சிங்கள கிராமங்களை தத்தெடுத்தவர் அவர்.


இலங்கையில் 1,75,000 தமிழர்களை கொன்று குவித்த இரக்கமற்ற அரக்கன் ராஜபக்சேவை, “அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” பாராட்டு சான்று வாசித்தவர்தான் இந்த முத்தையா முரளிதரன்.


தமிழர் என்று சொல்வதில் அவமானமாக இன்றுவரை நினைப்பவர் அவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் தன்னை சந்தித்த தமிழ் இளைஞர்களிடம், “எனக்கு தமிழ் தெரியாது” என்றுகூறி சிங்களத்தில் பேசினார்.


தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இன்றுவரை வெண்சாமரம் வீசிவரும் ஒட்டுமொத்த தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன்.


இப்படிப்பட்ட தமிழின துரோகியான முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த செய்தியை கேள்வி பட்டவுடன் தமிழக தமிழர்கள், இலங்கை தமிழர்கள் உள்பட உலகம் எங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களும் கொதித்து எழுந்தனர். தங்களின் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தினர்.


ஆனால், தமிழர்களின் பணத்தில் கொழுத்து வளர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் குரலை காலில் போட்டு மிதித்துவிட்டு, முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவேன் என்று ஆணவமாக அறிவித்து உள்ளார்.


உலக தமிழர்கள் மத்தியில் ஒட்டுமொத்த தமிழினத் துரோகியான முத்தையா முரளிதரனை, மகா யோக்கியனாக காட்டும் வேலையை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி விட்டார்.


தமிழின துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடித்து, அதை தமிழர்களை பார்க்க வைத்து, அதன் மூலம் தமிழர்கள் பணத்தில் மேலும் கொழுத்து செழிக்க முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது இந்த ஈன செயல், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக தமிழ் இனத்துக்கே இதுவரை யாரும் செய்ய முற்படாத பெரும் துரோகம் ஆகும்.


விஜய் சேதுபதியின் இந்த தமிழின துரோகத்தை எதிர்கால தமிழ் சந்ததிகூட மன்னிக்காது.


பணத்துக்காக ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கே துரோகியாக மாறிய தமிழக ராஜபக்சேவான நடிகர் விஜய் சேதுபதியை இப்போதாவது நாம் அடையாளம் கண்டுகொள்ளாவிட்டால், நம்மை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News