Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க பிரமுகர் அதிரடி கைது!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க பிரமுகர் அதிரடி கைது!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க பிரமுகர் அதிரடி கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Aug 2019 5:51 AM GMT


பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முஸ்லீம்களுக்கான பிரச்சினை மட்டுமே என்றிருந்தால், காஷ்மீரில் 370யை நீக்கும்போதே மோடியின் தலையை துண்டாடியிருப்போம். அமித்ஷாவை அப்போதே கொன்றிருப்போம் என்று தமுமுக பொதுகூட்டத்தில், திருச்சி மாணவரணி மாவட்ட செயலாளர் ஷரீப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து சமூக தளங்களில் கருத்துகள் பரவலாக எழுந்துள்ளன. இது போன்ற பேச்சுகள், இஸ்லாமிய சமூகத்தை வன்முறையாளர்களாகவே காட்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.


அதில், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்வோம் என்று திருச்சியில் த.ம.மு.க பொதுகூட்டத்தில் பேசப்பட்டது குறித்து தொடர்புடையவர்கள் மீதும், அந்த இயக்கத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.


இந்த நிலையில், தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.




https://twitter.com/ThanthiTV/status/1166562997667586049

Next Story
கதிர் தொகுப்பு
Trending News