Kathir News
Begin typing your search above and press return to search.

மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவு ஏன்? : நிர்மலா சீத்தாராமன் பதில்கள் நிதர்சனமானவை! - வர்த்தக நிபுணர்கள் கருத்து!

மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவு ஏன்? : நிர்மலா சீத்தாராமன் பதில்கள் நிதர்சனமானவை! - வர்த்தக நிபுணர்கள் கருத்து!

மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவு ஏன்? : நிர்மலா சீத்தாராமன் பதில்கள் நிதர்சனமானவை! - வர்த்தக நிபுணர்கள் கருத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2019 3:25 AM GMT


சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 10, 2015 அன்று மூத்த தொழில் அதிபர் மற்றும் மஹிந்திரா குழுமத் தலைவர் வாகனத் தொழிலின் எதிர்காலம் குறித்து தீர்க்கதரிசன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.. "உபெர் மற்றும் ஓலா போன்ற டாக்ஸி ஆப் பயன்பாடுகளால் வாகனத் தொழில் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்குள்ளாகும்" என்றார். "இன்று வாகனங்களை சொந்தமாக வைத்திருக்கக்கூடிய வசதியுள்ள ஏராளமான இளைஞர்கள் எந்த ஒரு வாகனத்தையும் சொந்தமாக வைத்திருக்க விரும்பவில்லை, எப்படியோ போக்குவரத்துக்கு ஒரு வாகனம் தேவை" என்ற அணுகுமுறையுடன் இருப்பதாக அவர் கூறினார்.


கடந்த 10-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதே போன்ற ஒரு கருத்தை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "பிஎஸ் 6 மற்றும் ஆட்டோமொபைல் வாகனங்கள் வாங்குவதில் ஈடுபடுவதை விட ஓலா மற்றும் உபெர் அளிக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலை புதிய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உண்மையில் அனுபவபூர்வமான ஒரு உண்மையை காலத்தின் உண்மைப் போக்கை குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் எப்படியாவது அரசை எதிர்க்க வேண்டும் என்கிற எதிர் போக்குடையவர்கள், புதிய தொழில் வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நிர்மலா சீதாராமனின் அறிக்கை குறித்து கண்டன பார்வையில் பரபரப்பை ஏற்படுத்தின. ட்விட்டரில் எதிர் கருத்துக்களை பரப்புவது பரவாயில்லை, ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கூற்றை ஆதரிக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதற்கான 'அனுபவ ரீதியான ஆதாரங்களை' நாம் தேட வேண்டும்.


சவாரி பகிர்வு சேவைகளின் நோக்கம்


ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னர், உபெரின் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிராவிஸ் கலானிக் சவாரி மோட்டார் ஷேர் தொழிலைத் தொடங்கியபோது, அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது: மக்கள் கார்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பது போல வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கைக்கான ஒரு நேர்காணலில் தனது கருத்தை கூறினார். "கார் உரிமையை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக்குங்கள்" என்று கூறிய அவர் குறைந்த கார்களில் அதிகமானவர்களைப் பயன் பெற வைக்க வேண்டும் என்று விரும்பினார்.


இது போன்ற நிறுவனங்களின் முதன்மை நோக்கம் கார்களின் உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து 'வாகன ஷேர் பயண முறை மற்றும் பணியமர்த்தலை' ஊக்குவிப்பதாகும். ஷேர் முறையில் சவாரி தொழில் கடந்த சில ஆண்டுகளில் அதிவேக உயர்வை பதிவு செய்துள்ளது, ஓலா மற்றும் உபெர் அதில் முன்னணியில் உள்ளது. சேவைப் பகிர்வு என்கிற இந்த கருத்து நான்கு சக்கர வாகனங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, இப்போது பைக் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் ரேபிடோ போன்ற பயன்பாடுகள் மூலம் வாடகைக்கு அமர்த்தலாம். எனவே ஷேரிங் வாகன முறையை அதிகரிப்பதன் மூலம், சொந்தமாக கார் உரிமை வைத்துக் கொள்ளும் முறை சரிவடையும் என்பது வெளிப்படையானது.


புதிய தலைமுறையினர் இந்த ஷேர் சவாரி முறையை ஏன் விரும்புகின்றனர் ?


உலகளாவிய ஆலோசனை அமைப்பான டெலாய்டி, 2019 உலக அளவிலான மோட்டார் நுகர்வோர் ஆய்வை ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த ஆய்வின்படி, இந்திய இளைஞர்களிடையே ஷேர் சவாரி முறை மிகவும் நம்பிக்கையை பெற்று வருகிறது. மோர்கன் ஸ்டான்லியின் மற்றொரு அறிக்கை, பயணித்த மொத்த மைல்களில் ஷேர் சவாரி முறையின் பங்கு 2030 க்குள் 35 சதவீதத்தையும், 2040 க்குள் 50 சதவீதத்தையும் எட்டும் என்று கணித்துள்ளது.


ஆய்வுகள் படி, ஒரு காரை பகிர்வது வாடகைக் காருக்கு ஆகும் செலவை விட மலிவானது. நாம் ஒரு கார் உரிமையாளர் என்ற பெருமைக்காக கார் வாங்கி பயன்படுத்துவது பழைய மன நிலை. ஆனால், இப்போதைய இளைஞர்கள் பந்தாவுக்குள் சென்று விடாமல் செயல்திறனில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் பழைய சமூக தடைகள் உடைந்து போகின்றன. குறிப்பாக "மெர்சிடிஸில் இருந்து இறங்குவதைப் பற்றி யோசிக்க முடியாத தனது நண்பர்கள் கூட ஓலா - உபெர் காரில் மகிழ்ச்சியுடன் பயணம் செல்கிறார்கள்" என்கிறார் பெங்களூரில் பணிபுரியும் 25 வயது அலுவலக ஊழியர் ஒருவர்.


கடந்த சில ஆண்டுகளில் சொந்த கார் வைத்திருப்பத்துடன் ஒப்பிடும்போது ஷேர் முறையில் கார் பயணத்தின் சிக்கனங்கள் என்னென்ன என்பது குறித்து சில செய்தித்தாள்கள் கீழ் கண்டவாறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.


நவம்பர் 2015 இல் எகனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, ஒருவர் ஷேர் முறை பயணத்தை பயன்படுத்தி வருடத்திற்கு 50,000 முதல் 1, 00,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். உபெர் மற்றும் ஓலா காலத்தில் "நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டுமா?" என்ற தலைப்பில் இந்த கட்டுரை இருந்தது.


அதே செய்தித்தாளில் ஏப்ரல் 30, 2016 அன்று வெளியிடப்பட்ட மற்றொரு கட்டுரை சொந்தமாக கார் வைத்திருக்கும் விஷயத்துக்கு எதிராக பகிரங்கமாக வாதிட்டது, அதற்கு "கார் வாங்க வேண்டாம், ஓலா அல்லது உபேர் வண்டியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அது இன்னும் அர்த்தமுள்ளதாகவும், அறிவு பூர்வமாகவும் இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊபர் மற்றும் ஒலாவில் பயணிப்பது மற்றும் சொந்த காரில் பயணிப்பது இவற்றில் எது பொருளாதார ரீதியாக சிறந்தது என்பதை மேற்கண்ட பத்திரிகை கீழ் கண்ட புள்ளி விபரங்களுடன் தெளிவு படுத்தியுள்ளது.


மேலே உள்ள பட விபரம் சரியான படத்தை முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு தோராயமான யோசனையைத் தருகிறது, மேலும் எகனாமிக் டைம்ஸ் மற்றும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் போன்ற முக்கிய செய்தித்தாள்களில் வெளியிட்ட நிபுணர்களின் கருத்துக்களுக்கு இது மிகவும் நெருக்கமானது.


பகிர்வு பயன்பாடுகள் கார் சந்தையை சீர்குலைக்கும் என்பதில் செய்தித்தாள்கள் மிகவும் திறந்திருக்கும். நவம்பர் 2018 இல் பிசினஸ் ஸ்டாண்டர்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, "ஓலா மற்றும் உபெருக்குப் பிறகு, இந்தியாவின் கார் சந்தையை சீர்குலைக்க மற்றொரு தொடக்கத் தயாரிப்பு". "உலகின் உபெர்ஸ் மற்றும் ஓலாஸுக்குப் பிறகு, கார் உரிமையில் இன்னும் சில போட்டிகள் உள்ளன" என்பது கட்டுரையின் முதல் வரி.


கார் ஷேர் சவாரி மூலம் மோட்டார் வாகன விற்பனையில் ஏற்படும் இடையூறு குறித்த ரிசர்வ் வங்கி ஆய்வு


2019 ஏப்ரல் மாதம் 25 தேதி , ரிசர்வ் வங்கி வெளியிட்ட மோட்டார் வாகனங்கள் துறையை இயக்குவது எது? என்கிற தலைப்பிலான ஆய்வறிக்கையில் கடந்த சில ஆண்டுகளில் ரைடு - ஹெயிலிங் சேவை ஆட்டோமொபைல் துறையை விட இரட்டிப்பாக மாறி வருகிறது. நகரங்கள் முழுவதும் இத்தகைய சேவைகளின் எண்ணிக்கை 2012 முதல் 2014 வரை அதிவேக உயர்வைப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த நகரங்களில் டாக்ஸிகளின் பதிவு அதிகரித்தது. டாக்ஸிகள் 2016-ஆம் ஆண்டில் மொத்த நான்கு சக்கர வாகன பதிவுகளில் 6 சதவீதத்தைக் கொண்டிருந்தன. டாக்ஸி சேவைகளுக்காக குத்தகைக்கு எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் நான்கு சக்கர வாகனங்களை வாங்கினர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் மோட்டார் வானக விற்பனை தேக்கத்துக்கு காரணம் குறித்த கருத்துக்கள் அவர் வெளியிட்ட அரசுக்கு சாதகமான புதிய கருத்துக்கள் அல்ல. இவை மோட்டார் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக ஜாம்பவான்களின் முந்தைய கருத்துக்கள் மட்டுமல்ல. உலகம் தற்போது போகும் பாதையை காட்டுகிறது. என்றாலும், சுணக்கம் மேலும் அதிகம் ஆகாமல் அரசு மோட்டார் துறையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News