Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக தி.மு.க மாநில நிர்வாகி : சார்- பதிவாளர் அலுவலகம் வரை தொடர்ந்த அராஜகம்.!

ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக தி.மு.க மாநில நிர்வாகி : சார்- பதிவாளர் அலுவலகம் வரை தொடர்ந்த அராஜகம்.!

ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக தி.மு.க மாநில நிர்வாகி : சார்- பதிவாளர் அலுவலகம் வரை தொடர்ந்த அராஜகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Sep 2019 7:58 AM GMT


மதுரையில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக திமுக மாநில நிர்வாகி உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவருக்குச் சொந்தமான 98 சென்ட் இடம் மதுரை பை-பாஸ் SRV சுரேந்திரன் நகர் பகுதியில் உள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை அதலை கிராமத்தைச் சேர்ந்த திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் செந்தில், அவரது மனைவி செந்தில் குமாரி உள்ளிட்டோர் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமும் அபகரித்தது தெரியவந்தது.


இது தொடர்பாக பாக்கியலட்சுமி மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். விசாரணையில், செந்தில், செந்தில் குமாரி உட்பட 24 பேர் ஆதார் அட்டை உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்து பாக்கியலட்சுமியின் 98 சென்ட் இடத்தை அபகரித்தது தெரியவந்தது.


இதையடுத்து செந்தில், அவரது மனைவி செந்தில் குமாரி, சார்- பதிவாளர் உட்பட 24 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் செந்தில், உறவினர்கள் பழனிக்குமார், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ், பாலகுரு, பாலச்சந்திரன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தலை மறை வான மற்றவர்களை தேடிவ ருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News