Kathir News
Begin typing your search above and press return to search.

“நாங்கள் ஆடிப்போய் இருக்கிறோம்” - வைரலானது நடிகர் விஜய் வெளியிட்ட பதட்டமான வீடியோ!!

“நாங்கள் ஆடிப்போய் இருக்கிறோம்” - வைரலானது நடிகர் விஜய் வெளியிட்ட பதட்டமான வீடியோ!!

“நாங்கள் ஆடிப்போய் இருக்கிறோம்” - வைரலானது நடிகர் விஜய் வெளியிட்ட பதட்டமான வீடியோ!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Sep 2019 11:17 AM GMT



நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.


இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்சியில் பேசிய நடிகர் விஜய், “சுபஸ்ரீ விபத்தில், யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு டிரைவரையும், பேனர் பிரிண்ட் செய்தவனையும் கைது செய்கிறார்கள். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும்” என்று அதிமுக அரசை கடுமையாக சாடினார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக உயிரோடு இருந்தது வரை, நடிகர் விஜய், இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார்.


விஜயின் தலைவா பட வெளியீட்டில் பிரச்சினை ஏற்பட்ட போது அவர் கைகெட்டி நின்று, தழுதழுத்த குரலில் பேசி வெளியிட்ட வீடியோவே மிகப்பெரிய சாட்சியாகும்.


அந்த வீடியோவில் நடிகர் விஜய் கூறியிருப்பதவாது:-


எல்லோருக்கும் வணக்கம்!
தலைவா திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால், தமிழகத்தில் ரிலீஸ் ஆகவில்லை. சரியாக, ரிலீசுக்க 2 நாட்களுக்கு முன்னால், சில அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சில கடிதங்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சில மிரட்டல்கள் வந்தன. இந்த படத்தை ரிலீஸ் செய்தால் சில பிரச்சினைகள் வரும் என்று குறிப்பிடப்பட்டது.


எனவே யோசிந்துதான் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். அதனால் கொஞ்சம் தாமதம்.


தமிழ் சினிமா உலகமே ஆடி போய்தான் இருக்கிறோம். நாங்கள் இப்போது திருச்சியில் இருக்கிறோம்.


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஒரு அப்பாய்ன்மெண்ட் கேட்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் எங்களை சந்திக்க அனுமதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.


அம்மா அவர்கள் தமிழகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். தமிழகத்தையே ஒரு முதல் மாநிலமாக கொண்டு வரவேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறார்கள்.


தமிழக மக்களுக்கு இவ்வளவு நல்லது செய்கிற அவர்கள், இந்த தலைவா பட பிரச்சினையிலும் தலையிட்டு, இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்து, கூடிய சீக்கிரம் ரிலீஸ் பண்ணுவார்கள் என்று நம்புகிறோம்.


இவ்வாறு நடிகர் விஜய் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்கும் அளவிற்கு நடிகர் விஜய்க்கு துணிச்சல் வந்து உள்ளது. அதோடு அவருக்கும் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.


இதன் வெளிப்பாடுதான் பிகில் இசை வெளியீட்டு விழா பேச்சு. பேசியவர் அடுத்தநாளே, லண்டனுக்கு பறந்து விட்டார்.


அரவது குடும்பம் அங்குதான் உள்ளது. அதாவது அவரது மகனோ அல்லது மகளோ தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்கூட படிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் எடுத்தது லண்டனில். தொடர்ந்து இருக்கப்போவதும் லண்டனில்தான்.


தமிழக மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக மட்டுமே, நடிகர் விஜய் சென்னைக்கு வருகிறார். மற்றபடி எல்லாமே வெளி நாடுகளில்தான்.


இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆகி தமிழகத்திற்கு நல்லது செய்யப்போவதாக குரல்கொடுக்கிறார். அதையும் சிலர் நம்புகின்றனர்.


அன்று தலைவா பட வெளியீட்டின் போது நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.




https://twitter.com/thoppur/status/1176077020314259458



என்ன ஒரு அடக்க ஒடுக்கம்!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News