Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.!

பா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.!

பா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2019 6:53 AM GMT


சில மாதங்களுக்கு முன் ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஆந்திர முதல்வர் தலைமையிலான தெலுகு தேசம் கட்சி படும் தோல்வி அடைந்தது. தெலுகு தேசம் கட்சி 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. அதற்க்கு முன் 1999 முதல் 2005 வரையிலும் தேசிய ஜனநாயக தெலுகு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது.


ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தால், தான் இந்த ஆண்டு நடந்த ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியவும் வந்தார்.


தெலுகு தேசம் கட்சி தொடங்கிய காரணமே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஆனால், இந்த சித்தாந்தத்திற்கு மாறாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த டெலிங்கனா தேர்தலில் சந்திரபாபு நாயுடு சென்று காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தார். இதனால் அந்த கூட்டணி படும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பின் அந்த கூட்டணியை விட்டு விலகிவந்த பின், ஆந்திர மாநில தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தெலுகு தேசம் கட்சி படும் தோல்வியை சந்தித்தது.


இதற்க்கு பின் சந்திரபாபு நாயுடு தனது தவறை உணர தொடங்கியுள்ளார். சமீபத்தில் நாயுடு தான் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு என்றும் அதனால்தான் அவர் தேர்தலை தோற்றார் என்றும் கூறினார்.


ஆனால் பாஜக மீண்டும் இவரை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இல்லை. தேர்தல் சமயத்திலே பாஜக தலைவர் அமித் ஷா நாய்டுவிற்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறினார். அதேபோல் இப்பொழுது ஆந்திர பிரதேச பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நாயுடு பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறினார். இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளார்.  Â


Next Story
கதிர் தொகுப்பு
Trending News