Kathir News
Begin typing your search above and press return to search.

5 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு செல்போன் மூலம் கணவன் முத்தலாக் !! மோடி சர்க்கார் சட்டப்படி மனைவி வழக்கு

5 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு செல்போன் மூலம் கணவன் முத்தலாக் !! மோடி சர்க்கார் சட்டப்படி மனைவி வழக்கு

5 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு செல்போன் மூலம் கணவன் முத்தலாக் !! மோடி சர்க்கார் சட்டப்படி மனைவி வழக்கு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2019 6:51 AM GMT


ஒரிசா மாநிலத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்ற மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவன் மீது மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய முத்தலாக் தடை சட்டம் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் கமில் என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளநிலையில் கமிலின் மனைவி 5வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அறிந்து கமில் செல்போன் மூலம் முத்தலாக் கூறினார்.


இதை ஏற்க மறுத்த அந்த பெண், அஸ்மோலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்த பேட்டியளித்த எஸ்.பி யமுனா பிரசாத் கூறுகையில், சமீபத்தில் இயற்றப்பட்ட முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணின் கணவர் மீது முத்தலாக் கூறியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News