Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirExclusive | ஆதாரம் வெளியானால் அதெல்லாம் தெரிந்து விடுமா.? முரசொலி மூலப்பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது - திக்கு தெரியாமல் தவிக்கும் தி.மு.க!

#KathirExclusive | ஆதாரம் வெளியானால் அதெல்லாம் தெரிந்து விடுமா.? முரசொலி மூலப்பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது - திக்கு தெரியாமல் தவிக்கும் தி.மு.க!

#KathirExclusive | ஆதாரம் வெளியானால் அதெல்லாம் தெரிந்து விடுமா.? முரசொலி மூலப்பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது - திக்கு தெரியாமல் தவிக்கும் தி.மு.க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jan 2020 12:51 PM GMT


முரசொலி மூலப்பத்திரம் விவகாரம் ஆரம்பித்து பல மாதங்கள் கடந்த போதிலும், பட்டா வந்ததே தவிர, இன்று வரை மூலப்பத்திரம் வந்தபாடில்லை. உண்மையாகவே திமுக தலைவர் ஸ்டாலினிடம் மூலப்பத்திரம் இருக்கிறதா.? தேசிய பட்டியல் இன மக்கள் ஆணையம் கேட்ட பிறகும், மூலப்பத்திரத்தை ஏன் ஸ்டாலின் கொடுக்காமல் இருக்கிறார் என்பது இன்னும் ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது.


இது குறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


கதிர்: தேசிய பட்டியல் இன மக்கள் ஆணையம் முரசொலி மூலப்பத்திரத்தை சமர்பிக்க சொல்லி கேட்ட பிறகும், இன்னும் ஸ்டாலின் சமர்பிக்காமல் இருக்கிறாரே. உண்மையாகவே மூலப்பத்திரம் இருக்கிறதா.?


தடா பெரியசாமி: இப்போது நான் ஒரு நிலத்தை வாங்குகிறேன் என்றால், அது எனக்கு மூலப்பத்திரம். அந்த மூலப்பத்திரம் எங்கிருந்து வாங்கப்பட்டதோ, அதுவும் ஒரு மூலப்பத்திரம். அந்த வகையில் எனக்கு வந்த தகவல் படி, 1974 ஆம் ஆண்டு, அஞ்சுகம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பத்திரம் செய்திருக்கிறார்கள். அதுவும் முரசொலி மாறனின் உண்மையான பெயரான தியாகராஜ சுந்தரம் என்ற பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. மாதவன் நாயர் என்பவரிடம் இருந்து, முரசொலி மாறன் வாங்கியிருக்கிறார்.


இந்த பத்திரம் ஸ்டாலினிடம் இருக்கிறது. அதனை இல்லை என்று மறுக்க முடியாது. ஒருவேளை இந்த பத்திரத்தை வெளியிட்டால், முரசொலி வாரிசுகளான தயாநிதிமாறன் வகையறா சொந்தங்கள் இடையில் விரிசல் வந்துவிடும் என்று கருதுகிறாரோ என்னவோ.


இருந்தாலும் மூலப்பத்திரம் இருக்கிறது. அதுவும் பல்வேறு குளறுபடிகளுடன் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது வெளியிட்டால் அதில் உள்ள சர்வே எண், அதில் அடங்கிய தகவலை கொண்டு இன்னும் பல்வேறு முறைகேடுகளை வெளிகொண்டுவர முடியும்.


அதனால் தான் மூலப்பத்திரத்தை வெளியிட ஸ்டாலின் தயங்குகிறார். மூலப்பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஸ்டாலின் வெளியிடாவிட்டாலும் நாங்கள் வெளியிடுவோம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News