அதிக நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள நார்ச்சத்து உணவு பற்றி அறிந்ததும், அறியாததும்.!

Update: 2021-05-25 01:30 GMT

உணவு ஜீரணிக்க எளிதானது என்பதால் அவற்றை உண்ண வேண்டும். நார்ச்சத்து உட்கொள்வது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதாவது நாம் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுவதில்லை. நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் நார்ச்சத்து உணவுகள், உங்கள் அதிகரிக்கும் எடையை, கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும். சிறப்பு என்னவென்றால், நாம் இயற்கை பழங்கள் மற்றும் கொட்டைகளிலிருந்து மட்டுமே இவற்றை பெறுகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? 


ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடக் கூடாது. அதை அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். சூப் செய்வதென்றால், அதிக காய்கறிகளை சேர்க்க வேண்டும். நொறுக்கு தீனியாக உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம். இப்போது நவீன கலாசாரம் வந்து விட்டது. அனைத்து வகை உணவுகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. ஆனால், இப்படி கிடைக்கும் உணவுப்பொருட்களில் நார்ச்சத்து, முழு அளவில் இருக்காது என்பது தான் நிபுணர்களின் கருத்து. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன. எதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பார்கள்.


நார்ச்சத்துக்களை அதிகமாக கொண்ட உணவுகள் இயற்கை அதிகமாக கிடைக்கக் கூடிய காய்கறிகளில் நிறைந்துள்ளது. குறிப்பாக, பழங்கள், பீன்ஸ், பார்லி, கேரட், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை போன்ற உணவுகளில் அதிகமாக இருக்கிறது. எனவே நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Tags:    

Similar News