சிபிஐ தலைவர் மதூர் சத்யா கைது!! பெண்களை ஏமாற்றி அந்தரங்க வீடியோக்கள் வெளியீடு!!

Update: 2026-03-22 09:07 GMT

சிபிஐ கட்சியைச் சேர்ந்த மதூர் சத்யா பெண்களை ஏமாற்றி அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சிபிஐ கட்சிக்கே புகார் அளித்தனர்.


சிபிஐ கட்சி புகார்களை விசாரித்து, ஆதாரங்களை சேகரித்து, மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்கி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது.


பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தனர். சிபிஐ நிர்வாகிகள் அவர்களுக்கு தைரியம் கூறி, அவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.


இப்போது வரை 8 பெண்கள் புகாரளித்துள்ளனர். மதூர் சத்யாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News