'பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற தி.மு.க உதவுகிறது' விளாசும் வேலூர் இப்ராஹிம்!

Update: 2021-06-17 12:15 GMT

பாஜக கட்சியின் அகில இந்திய மைனாரிட்டி மோர்ச்சாவின் செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். மதுரையில் சிறுபான்மையினர் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் ''சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க. பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது.'' என்று அவர் குற்றம்சாட்டினார்.


மதுரையில் நேற்று அவர் கூறுகையில் " தி.மு.க-வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை காவல் துறையை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க. பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது. கடந்த காலத்தில் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததையும், தேசத்திற்கு எதிரான செயல்களை சில அமைப்புகளும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கும் போது, அதற்கு பக்கபலமாக தி.மு.க. இருந்ததையும் விளக்கி, பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவினர் பிரச்சாரம் செய்வர்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News