முழுபோதையில் ரகளை செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

Update: 2021-07-19 01:00 GMT

ராணிப்பேட்டையில் ஆசிரியர் போராட்டத்தின் போது மதுபோதையில் கலாட்டா செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதல் அதிக நாட்கள் வேலை நாட்கள் விடுமுறை நாட்களாகவே இருந்தது ஆனால் அரசு சம்பளம் மட்டும் சரியான காலத்தில் அனைத்து ஆசிரியர்களையும் சென்றடைந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் கடந்த 14'ம் தேதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ''மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இரண்டுப்பேர் சாதியப் பாகுபாடுடன் செயல்படுவதைக் கண்டிக்கின்றோம்'' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அந்த போராட்டத்தின் போது பாணாவாரம் அருகேயுள்ள காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரான புவியரசன் என்பவர் மதுபோதையில் அங்குமிங்குமாக நடந்து இடையூறு செய்துகொண்டிருந்தார். திடீரென ஒருக்கட்டத்தில், காலணியை கழற்றிவிட்டு கண்டன உரையாற்றிக் கொண்டிருந்தவரின் காலில் விழுந்து வணங்கினார். கையெடுத்துக் கும்பிட்டார். குடிபோதையிலிருந்த தலைமை ஆசிரியரின் இந்தச் செயலை கண்டு மற்ற ஆசிரியர்கள் முகம் சுழித்தனர்.

இதனைதொடர்ந்து மதுபோதையில் காலில் விழுந்த தலைமை ஆசிரியர் புவியரசனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதன்மை கல்வி அலுவலர்.

Similar News