கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளம் உதவி செய்வதாக உறுதியளித்த பிரதமர்!

பிரதமர் மோடி கேரளா வெள்ளபாதிப்புக்கள் குறித்து கேரள முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டார்.

Update: 2021-10-19 01:30 GMT

கேரளா வெள்ளபாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுள்ளனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பாதுக்காப்பான இடங்களில் அவர்கள் தங்கவைக்கப்படுள்ளனர்.

இந்நிலையில், கேரளவெள்ளபாதிப்புகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து அவர் கேட்டறிந்தார். கேரளா வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். 

Source: Polimer

Tags:    

Similar News