போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடியிடம் உதவிகோரும் உக்ரைன்!

இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அரசு உதவி கோரியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2022-02-24 06:20 GMT

இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அரசு உதவி கோரியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கும், உக்ரைன் நாட்டுக்கும் போர் நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே மிகப்பெரிய பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்த போரை நிறுத்துவதற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்திய பிரதமர் மோடியிடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக ரஷ்யா நடத்தி வரும் போரை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source: Dinamalar

Image Courtesy: News 18

Tags:    

Similar News