ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் - திருமலா-திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Update: 2022-04-01 07:00 GMT

ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளை திருமலா-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


கொரோனா பரவல் குறைந்து தற்போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் ஏழுமலையான் தரிசனத்திற்காக அலைமோதுகிறது. இந்தநிலையில் இந்த ஏப்ரல் மாதத்திற்கான நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது, அதன்படி ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம் ஆகியவையும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.


மேலும் அதனைத் தொடர்ந்து 3'ம் தேதி மத்ஸ்ய ஜெயந்தியும், 10'ம் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12'ஆம் தேதி சர்வ ஏகாதசி விழாவும், 14'ஆம் தேதி முதல் 16ஆம தேதி வரை வசந்த உற்சவமும், 26'ம் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29'ம் தேதி மாத சிவராத்திரியும் 30'ஆம் தேதி சர்வ அம்மாவாசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News