சாலையில் வலிப்பு வந்தவருக்கு தக்க சமயத்தில் கையில் இருந்த காப்பை கொடுத்த காப்பாற்றிய அண்ணாமலை!

Update: 2022-07-03 09:50 GMT

சாலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சரியான தருணத்தில் உதவியதால் நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கோரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். இதற்காக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடைபெற்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் மற்றும் பா.ஜ.க.வினர் ஓட்டலுக்கு சென்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நட்சத்திர ஓட்டலுக்கு மற்ற நிர்வாகிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வலிப்பால் சாலையில் அவதியுற்றிருப்பதை பார்த்து தக்க தருணத்தில் உதவி செய்து உயிரை காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் கார்களில் செல்லும் வழியில் கிண்டியில் சாலையில் வலிப்பு வந்து ஒருவர் அவதிப்பட்டு கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னால். சென்று கொண்டிருந்த காரிலிருந்து இறங்கி அவருக்கு உதவிகளை செய்தனர் பாஜக மாநில தலைவர் அவர்கள், அவர்கள் மற்றும் சக்கரவர்த்தி அவர்கள், நான், மற்றும் கராத்தே தியாகராஜன் மற்றும் பால்கனகராஜ் ஆகியோரும் உடன் இறங்கி சென்று அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இருந்துவிட்டு பின்னர் கூட்டத்திற்கு சென்றோம். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News