மைக் பிடித்து மதப்பிரச்சாரம் செய்த கும்பல்! "இடத்தை காலி பண்ணுங்கள்" எனக் கூறி கும்பலை விரட்டி அடித்த பொதுமக்கள்!

Update: 2022-08-03 11:59 GMT

காரைக்கால்: "இயேசு சொல்கிறார், என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று மதப்பிரச்சாரக் கும்பலை சேர்ந்த ஒருவர், பொதுமக்களை நோக்கி மதப்பிரச்சாரம் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

"இந்திய அளவில் சட்டவிரோத கட்டாய மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. பொது இடங்களில் பொதுமக்கள் அதிலும் முக்கியமாக, இந்து மக்களை குறிவைத்து, மத பிரச்சார கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது" என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இணையத்தில் பரவிய ஒரு காணொளி அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

காரைக்கால் மாவட்டம் அன்பு நகர் பகுதி பொது மக்களிடம்,  "வியாதிகளே மனுஷனுக்கு வருத்தம், குடும்ப சண்டைகள் மனுஷனுக்கு வருத்தம், இப்படி பல வருத்தங்கள் நிறைந்த இந்த உலகத்தில் இயேசு சொல்கிறார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே அனைவரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று ஆர்வத்துடன் மைக்கை பிடித்து, ஒரு நபர்  தீவிர மதப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

உடனடியாக அந்த ஊர் பொது மக்களில் ஒருவர், மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அந்த நபரிடம் சென்று  "இங்கே யாரும் இளைப்பாறல! எல்லாரும் இளைப்பாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்! இங்கே இருக்கிறவர்கள் அனைவரும் இந்துக்கள் தான், நீங்கள் கிறிஸ்தவர்கள் இருக்கும் இடத்தில் சென்று இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள்" என்று தடாலடியாக அந்த மதப்பிரச்சாரம் செய்த நபரிடம் கூறியுள்ளார். Thamarai tv

இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணி  அமைப்பினர், மதப்பிரச்சாரம் செய்தவர்களை  பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

Hindu munnani

Tags:    

Similar News