பள்ளி ஆசிரியர் 'டேனியலை' போக்சோ சட்டத்தில் கைது செய்க - இந்து முன்னணி கோரிக்கை! ஏன் தெரியுமா?

Update: 2022-08-03 12:02 GMT

புதுச்சேரி: "பள்ளி மானவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. சமீபகாலமாக பள்ளி மானவிகள் மீது பாலியல் அத்துமீறல்களில், பள்ளி ஆசிரியர்களே ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதனால் பாதிக்கப்படும் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மாணவிகளின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியில் படிக்கும் மானவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி செவன்த் டே தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமில்லாமல், தற்கொலைக்கும் தூண்டிய விலங்கியல் ஆசிரியர் சகாய தோனி வளவன் (எ) டேனியலை போக்சோ சட்டத்தில் கைது செய்வது மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதி‌ நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்தப் பள்ளியில் பிற மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. 

Hindu munnani

Tags:    

Similar News