எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது... பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி..

பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-26 05:14 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக  சென்றுள்ளார். அவர் 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். அவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்தியா-எகிப்து இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


அது மட்டுமில்லாமல் தற்பொழுது எகிப்து அதிபர் மூலமாக பிரதமர் மோடிக்கு விருதும் அளிக்கப்பட்டு இருக்கிறது. கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார். எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.


இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் நரேந்திர மோடியே ஆவார். இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெறுவதன் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை பெருமை கொள்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News