சர்வதேச தரத்தில் இருக்கும் இதய ஸ்டென்ட்டுக்கு டஃப் கொடுக்கும் இந்திய புதிய தலைமுறை இதய ஸ்டென்ட்டு!!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இதய சிகிச்சை நிபுணர்களின் உலக அளவிலான மாநாடு நடைபெற்று வந்த நிலையில் அதில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும், இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்னும் இந்தியாவில் டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை செய்யப்பட்ட முடிவை தாக்கல் செய்தார்.
இதனுடைய துணைத் தலைவராக டாக்டர் பால், திட்ட இயக்குனராக டாக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட், சுப்ராப்ளக்ஸ் க்ரஸ் மற்றும் அமெரிக்க தயாரிப்பில் சர்வதேச சந்தையில் கிடைக்கக்கூடிய ஜீயன்ஸ் என்ற இதய ஸ்டெண்ட்டும் போன்றவை இடம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து டாக்டர் கவுல், இந்த ஸ்டென்ட் குஜராத்தின் சூரத் நகரில் தயாரிக்கப்படுவதாக கூறினார். மேலும் இந்த பரிசோதனையானது இந்தியாவில் 66 இதய சிகிச்சை மையங்களில் நடத்தப்பட்டதாகவும், அதில் நீரிழிவு மற்றும் இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் 3 முக்கிய நாளங்களிலும் அடைப்பு இருப்பவர்களுக்கு இந்திய தயாரிப்பு ஸ்டென்ட் வைத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் இந்திய தயாரிப்பு எந்த விதத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும் ஸ்டென்ட்டுக்கு குறைவானது இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.