வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நடைபெற்ற ரெய்சினா பேச்சுவார்த்தை - 2026 நிகழ்ச்சியில் பேசினார்.
ஈரானின் ‘லாவன்’ கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவில் நுழைய அனுமதி கேட்டதாகவும், மத்திய அரசு அனுமதி வழங்கியதாகவும் கூறினார்.
சில நாட்களுக்கு பிறகு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், இது மனிதாபிமான உதவி என்றார்.
மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் புவிசார் அரசியலுக்கும் இதுக்கும் தொடர்பில்லை, அமெரிக்க தாக்குதலில் தேனா கப்பல் சிக்கியது துரதிருஷ்டவசமானது என கூறினார்.