தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு:மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!
தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் ஜி.செல்வம் சிஎன் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராமேஸ்வரம் தீவு தஞ்சாவூர் தேவலா நீலகிரி மாவட்டம் மாமல்லபுரம் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேலும் நிதியாண்டு 2024-25-ல் மாமல்லபுரத்தில் பாரம்பரிய பூங்காவான நந்தவன மேம்பாட்டுக்கு ரூ.99.67 கோடியும், தேவாலாவில் மலர் தோட்டத்திற்கு ரூ.70.23 கோடியும் ராமேஸ்வரம் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.20.01 கோடியும் 8 நவகிரக கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.40.94 கோடியும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் அலங்கார மின் விளக்கு அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.11.47 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்