வரலாறு காணாத உச்சத்தை எட்டியது யூபிஐ:மார்ச் மாதத்தில் மட்டும் ரூ24.77 லட்சம் கோடி!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்(NPCI)வெளியிட்ட தரவுகளின்படி ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம்(UPI)மூலம் பரிவர்த்தனைகள் மார்ச் 2025 இல் ரூ.24.77 லட்சம் கோடியாக உயர்ந்து இது பிப்ரவரி மாத பரிவர்த்தனை மதிப்பான ரூ.21.96 லட்சம் கோடியை விட 12.7 சதவீதம் அதிகமாகும்
இதனை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது,பரிவர்த்தனை மதிப்பு ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தபோது UPI கொடுப்பனவுகள் ஆண்டுக்கு 25 சதவீத வளர்ச்சியைக் கண்டன பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு 36 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது மேலும் மார்ச் மாதத்தில் சராசரி தினசரி UPI பரிவர்த்தனை மதிப்பு ரூ.79,903 கோடியாக இருந்தது,இது பிப்ரவரி மாதத்தை விட 1.9 சதவீதம் அதிகமாகும்,அதே நேரத்தில் பரிவர்த்தனை அளவு மாதத்திற்கு மாதம் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது