மத்திய அரசு நடவடிக்கையால் இலங்கை சிறையில் இருந்து 47 தமிழக மீனவர்கள் விடுதலை!

Update: 2022-02-18 11:20 GMT

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை எல்லைக்கு சென்றதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் 56 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீனவ குடும்பங்கள் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் 9 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி சொந்த ஊர் திரும்பியிருந்தனர். தற்போது மேலும் 47 மீனவர்கள் விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவரவர் வீடுகளுக்க அனுப்பி வைத்தனர். மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு மீனவ குடும்பங்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News