
ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிம்ஸ்டெக் அமைப்பின் ஆறாவது உச்சி மாநாடு நடைபெற உள்ளது இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்
தாய்லாந்தில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கு பிறகு ஏப்ரல் ஐந்தாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்ல உள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை அதிபர் திசாநாயக்க டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு சமயத்தில் விவாதிக்கப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதாக அந்நாட்டு செய்தி இணையதளம் ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது
பிரதமரின் இந்த பயணத்தின் போது இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது