காந்தி நகரில் 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அமித்ஷா...

Update: 2024-06-04 12:50 GMT

இன்று காலை 8:00 மணி முதல் லோக்சபா தேர்தல் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அனுராக் தாகூர், ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் போன்ற பல பாஜக ஸ்டார் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதுவரை வெளியான தகவலின் படி இவர்களின் வெற்றி ஏறக்குறைய உறுதியானாலும், ஓட்டு வித்தியாசம் யாருக்கு அதிகமாக கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. 

அதன்படி மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா இந்தியாவிலேயே அதிகபட்சமாக 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அதாவது காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா 10,10,972 ஓட்டுகள் பெற்றதோடு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் சோனல் ராமன் பாய் படேலை 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தன்வசம் ஆக்கினார். 

முன்னதாக இதே தொகுதியில் கடந்த 2019 ஆம் லோக்சபா தேர்தலின் பொழுது 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Source : Dinamalar 

Tags:    

Similar News