வங்கதேசப் பொதுத்தேர்தல்!! BNP கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
By : Bharathi Latha
Update: 2026-02-15 17:55 GMT
பிரதமர் மோடி வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள BNP கட்சிக்கு வாழ்த்து தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்த BNP கட்சி, இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க ஆவலாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி BNP கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளைப் பேணுவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.
வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரித்து இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட BNP கட்சி தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.