கொரோனா ஊரடங்கு.. யார் வீட்டில் இருப்பது ? 2 மனைவியை கட்டிய கணவருக்கு வந்த சோதனை.!
கொரோனா ஊரடங்கு.. யார் வீட்டில் இருப்பது ? 2 மனைவியை கட்டிய கணவருக்கு வந்த சோதனை.!;

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு கிழக்கு மண்டல காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 வயதுடையவர் வசித்து வருகிறார்.
இவர் அந்தப்பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இதனையடுத்து தனது முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 2019ம் ஆண்டு மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.
தொழிற்சாலை சம்பந்தமாக வெளியே சென்று வருவதாக முதல் மனைவி வீட்டில் கூறிவிட்டு அந்த நபர் 2-வது மனைவி வீட்டில் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.
இந்த சம்பவம் எப்படியோ முதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முதல் மனைவி பெங்களூரு மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் 2 மனைவிகளை திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த அந்த நபர் தனது முதல் மனைவி மற்றும் 2வது மனைவியின் பெற்றோருடன் சமாதானம் பேசியுள்ளார்.
நான் தொழிற்சாலை நடத்திவருகிறேன் என்னை போலீசார் கைது செய்தால் சமூதாயத்தில் அவப்பெயர் உண்டாகும்.
அது மட்டுமின்றி தொழில் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக நான் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், 2வது மனைவி வீட்டில் அடுத்த ஒரு வாரம் தங்குகிறேன் என்று பேசியுள்ளார்.