முத்ரா திட்டத்தின் கீழ் ரூபாய் 23 லட்சம் கோடி கடன் - மத்திய அரசு தகவல்!

முத்ரா திட்டத்தின் கீழ் ரூபாய் 23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-09 10:45 GMT

முத்ரா திட்டத்தின் எட்டாவது ஆண்டு நிறைவை ஒட்டி மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமைக்கு கொண்டுவரப்பட்ட இந்த திட்ட மூலம் குறுந்தொழில் நிறுவனங்கள் எளிதாகவும் சிரமம் இல்லாமலும் கடன் உதவி பெற முடிகிறது. ஏராளமான இளம் தொழில் முனைவோர் தொழில்களை தொடங்க இது உதவியாக இருக்கிறது என்றார்.


இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 23.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்த கடன்களின் எண்ணிக்கை 40.82 கோடி ஆகும் . பெண் தொழில் முனைவோரும் அதிக அளவில் கடன் பெற்று இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.





 


Similar News