9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசியா? கட்டுக்கதையும் உண்மையான நிலவரமும்..

Update: 2024-01-15 05:46 GMT

மத்திய சுகாதார அமைச்சுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியான வகையில் இந்தியாவில் எடுத்து வருகிறது. அந்த வகுப்பில் தற்பொழுது புதிதாக குழந்தைகளைத் தாக்கும் நோயிலிருந்து அவர்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதாக தொடர்ச்சியான வண்ணம் செய்திகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி செலுத்தப்படும் என்று செய்தி வெளியாக இருக்கிறது. இது முற்றிலும் போலியானவை என்று மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்து இருக்கிறது.


9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை அரசு தொடங்கவுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை மற்றும் யூகத்தின் அடிப்படையானது. 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கும் என்று சில ஊடக செய்திகள் யூக அடிப்படையில் வெளியாகியுள்ளன. இதுபோன்ற செய்திகளில் உண்மை ஏதுமில்லை.


நாட்டில் எச்.பி.வி தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாட்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிகழ்வுகளை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகளுடன் தொடர்ந்து அமைச்சகம் தொடர்பில் உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News