மற்றொருவரின் மனைவியைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் வீடு புகுந்து தாக்கிய மத போதகர்

Update: 2022-08-07 05:58 GMT

மற்றொருவரின் மனைவியுடன் தவறான உறவில் இருந்த மத போதகர் உட்பட மூன்று பேர் மீது வீடு புகுந்து தாக்கியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் கிராமத்தில் சிவஇளங்கோ நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெரீன் மற்றும் இவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜோஸ்வா என்பவரும்‌ அருகில் வசித்து வந்துள்ளார். ஜெரினின் மனைவி சுசித்ரா விற்கும் மத போதகரான ஜோஷ்வாவிற்கும் பழக்கம் ஏற்படுத்தியுள்ளது. 


இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ஜெரின், தனது மனைவி சுசித்ராவை கண்டித்துள்ளார். இரு குடும்பத்தார் கண்டித்த நிலையில், இருவரும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ஜெரின் தனது மனைவி சுசித்ராவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். பிரிந்து சரவணம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இதையடுத்து சுசித்ரா தனது தந்தை அழகேசன் மற்றும் மத போதகர் ஜோஸ்வா ஆகியோருடன் ஜெரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 


அங்கு அவர்களுக்கிடையே சமாதானம் பேசி ஜெரினை சுசித்ராவுடன் வாழ வற்புறுத்தியுள்ளனர். இவர்கள் வற்புறுத்தியும் ஜெரின் தனது மனைவி சுசித்ராவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் கோபமடைந்த மூவரும் ஒன்று சேர்ந்து ஜெரினை தாக்கியுள்ளனர். பின் அவர் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை உடைத்து அவரை மிரட்டிச் சென்றுள்ளனர். இச் சம்பவத்திற்கு பின் சரவணம்பட்டி காவல் துறையிணரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின் போலீசார் மத போதகர் ஜோஸ்வா, சுசித்ரா மற்றும் அவரது தந்தை அழகேசன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Source: Dinamalar 

https://m.dinamalar.com/detail.php?id=3085894


Tags:    

Similar News