ஏர்வாடியில் இந்து சாமியார் போன்று காவி உடையில் சுற்றித்திரிந்த அப்துல் வகாப்! பயங்கரவாதியா? போலீசார் தீவிர விசாரணை!!

ஏர்வாடியில் இந்து சாமியார் போன்று காவி உடையில் சுற்றித்திரிந்த அப்துல் வகாப்! பயங்கரவாதியா? போலீசார் தீவிர விசாரணை!!

Update: 2019-09-18 08:58 GMT


தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே, ஏர்வாடி பகுதியில் காவி உடையுடன் இந்து சாமியார் போன்று ஒருவன், கடந்த சில நாட்களாக நடமாடி வந்தான்.


இவன் கையில் இந்துக்கள் கட்டும் புனித கயிறும் கட்டி இருந்தான். ஆனால் உருது, இந்தி போன்ற மொழிகளில் சரளமாக பேசியுள்ளான்.


இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள், அந்த மர்மநபர் குறித்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


இதனைத் தொடர்ந்து, காவி உடையில் சுற்றித்திரிந்த அவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவன், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் வகாப் என்று தெரிவித்துள்ளான்.





இவன் உண்மையில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன்தானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மராட்டிய மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளனர்.


இவன் எதற்காக காவி உடையில் இந்து சாமியார் போன்று வேடமிட்டு அலைந்தான்? முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடப்பு உள்ளவனா? வட இந்தியாவில் இருந்து இங்கு வந்தவனா? அல்லது இலங்கையில் இருந்து கடல் வழியாக இங்கு வந்தானா? இவனது நோக்கம் என்ன? என்பவை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




https://youtu.be/HNO51B5HzPg



இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Similar News